• Home
  • SRILANKA
    • COLOMBO
    • JAFFNA
    • KILINOCHCHI
    • MULLAITIVU
    • TRINCOMALEE
  • WORLD
    • Global Business
    • Markets
    • Small Business
    • Your Money
  • CINEMA
  • ENTERTAINMENT
    • Lifestyle
    • Music
    • Movies
  • Technology
  • Sports
    • Tennis
    • Basketball
    • Football
    • Golf
  • Beauty
  • Medicine
  • VINOTHAM


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதிய பொருளாதார ஆலோசகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி என்பவரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் செயலாளர் அலுவலகத்தின் பொருளாதார இணைப்புப் பணிப்பாளராக இந்திரஜித் குமாரசுவாமி கடமையாற்றியுள்ளார்.
உலகப் பொருளாதார அறிஞர்களில் ஒருவராக போற்றப்படும் இந்திரஜித் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
கலாநிதி இந்திரஜித் சுமாரசுவாமி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் போராளிகள் குறித்த முன்னாள் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியின், சிரேஸ்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது


யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொடுத்த பணத்தினை கேட்டு சென்ற இருவர் மீது வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட குழுவினர் கைகலப்பில் ஈடுபட்டதுடன், வாளால் வெட்டியுள்ளனர். இரு சாராருக்குமிடையே இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்த குணசேகரம் பிரேமம்காந் (வயது 26), சதர்சன் நிரூபன் (வயது 27), குணசேகரம் பிரசாத் (வயது 24), வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த காந்தன் ஆகிய நால்வரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
வெட்டுக் காயங்களுக்கு இலக்காகிய நால்வரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலத்த காயங்களுடன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நிலா. சிம்ரனுக்கு போட்டியாக வருவார் என்று கருதப்பட்ட நிலா, அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர் காணாமல் போனார். படப்பிடிப்பு தளங்களில் ஆர்ப்பாட்டமாக நடந்து கொள்வது, நட்சத்திர ஓட்டல் வசதி, குளிக்க மினரல் வாட்டர் வசதி என பல பிரச்னைகளில் சிக்கியவருக்கு பலரும் வாய்ப்புத் தர தயங்கினார்கள். அதோடு நிலா நடிப்பு கிலோ என்ன விலை என்று வேறு கேட்டார். இவர் நடித்து வெளிவராமல் இருந்த கில்லாடி படத்தை இப்போது வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நுழைந்து விடலாம் என்று கருதிய நிலா இப்போது மீடியாக்கள் முன் வந்து நிற்கிறார்.
வாய்ப்பு கிடைக்காமல் போனது ஏன் என்பதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் இது..., ' நான் சினிமாவை மட்டும் நம்பியிருக்கவில்லை, எங்க அப்பா ஓட்டல் பிசினஸ் பண்ணுகிறார். அதில் நானும் பார்ட்னராக இருக்கிறேன். உலகம் முழுவதும் எங்களுக்கு ஓட்டல் இருக்கிறது. அதை கவனிக்க வேண்டாமா? அதுமட்டுமில்லை நான் பேஷன் டிசைனிங் படிச்சிருக்கேன். நிறைய பேஷன் ஷோக்கள் நடத்துறேன். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். இந்தியில் 2 படத்தில் நடிச்சிட்டிருக்கேன், தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடிக்கிறேன் தெரியுமா? தமிழில்தான் நான் குளிக்க மினரல் வாட்டர் கேட்டேன். அவரை காதலிக்கிறேன். இவரை காதலிக்கிறேன்னு என் மேல சர்ச்சையை கிளப்பி அனுப்பிட்டாங்க. 'கில்லாடி'க்கு பிறகு நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவேன்' என்கிறார்.

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர்.
இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், இளநீரில் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது.
மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது. இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது.
லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது. இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

நமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல், அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாசிலில் உள்ள உருவம் தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான் மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக் கூட சிக்கியுள்ளது.
இந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது.
மேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதை போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அணில் போன்ற உயிரினம் தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என்ற போர்வையில் சமுகப் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை படையினர் தமது முகாம்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், கைவேலி, போன்ற கிராமங்களிலிருந்து 250 முன்னாள் பெண் போராளிகளும் , 100 முன்னாள் ஆண் போராளிகளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஆக நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு 6மாதங்கள், 10ஆயிரம் ரூபா சம்பளத்துடன், கிராம மட்டத்தில் இடம்பெறும் சமூக, கலாச்சார பிறழ்வுகளை தடுப்பதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்குமான உரிமை வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களுக்கு இதுவரை அவ்வாறான உரிமைகள் எவையும் வழங்கப்படாத நிலையில் தற்போது கைவேலியிலுள்ள காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின், பாரிய படைமுகாமிற்கு முன்பாக காவல் கடமை வழங்கப்பட்டிருக்கின்றது.
காலையில் 8.30 மணிக்கு கடமைக்குச் செல்லும் இந்த பாதுகாப்பு ஊழியர்கள் மாலை 5மணிக்கே வீடு திரும்ப முடியும்.மேலும் இவர்களுக்கான வரவுப்பதிவுகளை படையினரே மேற்கொள்வதோடு, பணிக்கு வராவிட்டால் கடுமையான கேள்விகளும், தண்டனைகளும் கூட வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Older Posts

நடிகர் தளங்கள்

கமல்
ரஜனிகாந்
சூர்யா
அஜித்
விக்ரம்
பிரசாந்
ஜீவா
மாதவன்
விஜய்
விஷால்

நடிகை தளங்கள்

அசின்
ஸ்ரேயா
த்ரிஷா
பாவனா
ஜஸ்வர்யராய்
கோபிகா
பூமிகா
ஜெனிலிஜா
கிரன்
நமீதா
நயன்தாரா
மீரா ஜாஸ்மின்
பத்ம பிரியா
பூஜா
ரீமாசென்
சதா
சந்தியா
சங்கீதா
ஷெரின்
ஸ்னேகா

பத்திரிகைகள்

வீரகேசரி
உதயன்
தினக்குரல்
வலம்புரி
சுடர் ஒளி
தினகரன்- இலங்கை
தென்செய்தி

தினமலர்
தினத்தந்தி
மாலைமலர்
தினமணி
மக்கள் ஓசை
மாலைச்சுடர்
தினபூமி
தினகரன்- இந்தியா
தமிழ் முரசு

Software Download

Apache
Skype
Yahoo messenger
Msn messenger
Team viewer
Google talk
Internet explorer
Mozilla firefox
Google chrome
Safari browser
Epic indian browser
Winamp player
Km player
Real player
Dreamweaver
Abode Reader
PHP
Oracle
Download Accelerator
Abode Flash Player





Casino online

  • Popular
  • Comments
  • Archives
    1. இதுவரை பார்க்காத நித்தியானந்தா ரஞ்சிதா காமலீலைகள்.! (முழு வீடியோ)
    2. காமத்தில் கருகும் காரிகைகள் – உறைய வைக்கும் வடபகுதி உண்மைகள் !
    3. ஆடை இல்லாமல் நடித்த பிரபல தமிழ் நடிகை...
    4. லண்டனில் காலை வேளையில் உள்ளாடைகளுடன் தெருவில் சென்ற பெண்களால் பரபரப்பு!
    5. திரையுலகை திணறடித்த பிரியங்காவின் படுக்கையறைக் காட்சி... (வீடியோ இணைப்பு)...
    6. மூன்று மார்புகளுடன் கலக்கும் காத்லீன் லீப்! (படங்கள் இணைப்பு )
    7. தடை செய்யப்பட்ட இணையதளத்தை பார்வையிடுவதற்கு...
    8. செம்பியன்பற்று புனிதபிலிப்நேரியர் ஆலய திருவிழா
    1. 2013
    2. 2012
    3. 2011
  • Buzz
  • Twitter
  • Facebook
  • RSS
  • Email

Advertisement

Recent Posts

Blogroll

  • Documentation
  • Plugins
  • Suggest Ideas
  • Support Forum
  • Themes
  • WordPress Blog
  • WordPress Planet

Advertisement

  • Home
  • About
  • Archives
  • Full Width
  • Links
  • Theme Options
Copyright 2012 winjaffna. All rights reserved. Design ByGRREGAN